IPL 2022 Robin Uthappa- என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியேற்றியது மும்பை இந்தியன்ஸ்- உத்தப்பா பகீர் பேட்டி
IPL 2022 Robin Uthappa- என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியேற்றியது மும்பை இந்தியன்ஸ்- உத்தப்பா பகீர் பேட்டி
அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து தான் மிரட்டப்பட்டு விரட்டப்பட்டதாகவும் வேறு அணிக்கு தன்னை மாற்ற ஆவணங்களில் கையெழுத்திடுமாறு மும்பை இந்தியன்ஸ் மிரட்டியதாகவும் ராபின் உத்தப்பா குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார். அப்படி அணி மாறுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திடவில்லை எனில் ஒரு போட்டியில் கூட ஆட முடியாது என்று தன்னை மிரட்டியதாகவும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
அஸ்வினுடன் ஆன உரையாடலில் உத்தப்பா புட்டு வைத்த சங்கதி இதோ:
நான், ஜாகீர் கான் மற்றும் மணீஷ் பாண்டேவுடன் இருந்தேன். ஐபிஎல் தொடரில் முதன் முதலில் அணி மாற்றப்பட்ட வீரர் நான் தான். எனக்கு இது மிகவும் கஷ்டமாக இருந்தது, ஏனெனில் என் நம்பிக்கை, விசுவாசம் அனைத்தும் மும்பை அணியுடன் தான் இருந்தது. ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பு இது நடந்தது. நான் ஆவணங்களில் கையெழுத்திட மறுத்தேன்.
என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் சிலபல பிரச்சனைகளை அப்போது சந்தித்தேன். ஆர்சிபியுடனான முதல் சீசனில் நான் உண்மையில் மனச்சோர்வின் மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்தேன். என்னை நீக்கி விட்டு மீண்டும் அணியில் எடுத்த ஒரு மேட்சில் தான் நான் நன்றாக ஆடினேன். அந்தப் போட்டியில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தேவையை உணர்ந்தேன்.
மும்பை இந்தியன்சில் ஒருவர், அவர் பெயரை நான் கூற விரும்பவில்லை, நான் ட்ரான்ஸ்பர் பேப்பரில் கையெழுத்திடவில்லை எனில் ஒரு போட்டியில் கூட நான் லெவனில் இருக்க மாட்டேன் என்றார்”
இவ்வாறு கூறினர் ராபின் உத்தப்பா, இவர் ஐபிஎல் 2008 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அடுத்த ஆண்டே ஆர்சிபிக்கு ஆடினார். அப்போதுதான் ஆர்சிபி பைனலுக்கு தகுதி பெற்றது. அப்போது அனில் கும்ப்ளே கேப்டன். இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் தோற்றது, இந்த டெக்கான் சார்ஜர்ஸ்தான் இப்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment