விவசாய கடன் அட்டை வழங்க இன்று முதல் மே 1 வரை சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு



சென்னை: தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில்  38.25 லட்சம் விவசாயிகள்  பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து  பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம் இன்று (24ம் தேதி) முதல் 1.5.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இன்று நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கூட்டப்பொருளாக பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் மே 1ம் தேதி வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog