பேரறிவாளன் விடுதலை: மகிழ்ச்சி... ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி... பிரபலங்கள் ஹேப்பி!


பேரறிவாளன் விடுதலை: மகிழ்ச்சி... ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி... பிரபலங்கள் ஹேப்பி!


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டபேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு தீர்மானித்தது.

ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என தெரிவித்ததோடு, சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. தீர்ப்பை அடுத்து பேரறிவாளன் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் விட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.


இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையை அடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி... வாழ்த்துகள் பேரறிவாளன் என பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ள டிவிட்டில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். பிரபல இயக்குநரான சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டிவிட்டில் 31 ஆண்டுகள் போராடி ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்.. என குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog