Posts

turmeric benefits : மஞ்சள் ஃபேஸ் பேக் இப்படி போட்டா ஒரு வாரத்துக்கு முகம் ஜொலிக்குமாம்! உடனே ட்ரை பண்ணுங்க!

Image
மஞ்சளில் 30 வகையான மஞ்சள் உள்ளது.தனித்துவமான குணம் கொண்ட இது சருமத்துக்கு மிக மிக நல்லது. ஆனால் நவீன காலத்தில் இதன் பயன்பாடு குறைந்திருந்தாலும் மீண்டும் இதன் மகத்துவம் உணர்ந்து பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். சருமத்துக்கு மஞ்சள் - மஞ்சளின் வகைகள் பாரம்பரியமான மகத்துவமிக்க மஞ்சள் சருமத்துக்கு சிறந்த மூலிகை என்கிறார் அழகுக்கலை நிபுணர் டாக்டர் வசுந்தரா. அக்னி நட்சத்திரம் ஓவரா இருக்கே, தோல், கூந்தல் இரண்டையும் இப்படி தான் பராமரிக்கணுமாம்! நிபுணர் குறிப்பு! இந்தியாவில் மேகலயா மாநிலத்தில் லாக்கடாங் என்னும் இடத்தில் விளையக்கூடிய மஞ்சளில் தான் அதிக அளவு குர்குமின் ( 4%) இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிக மருத்துவ குணங்களை... விரிவாக படிக்க >>

பேரறிவாளன் விடுதலை: மகிழ்ச்சி... ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி... பிரபலங்கள் ஹேப்பி!

Image
பேரறிவாளன் விடுதலை: மகிழ்ச்சி... ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி... பிரபலங்கள் ஹேப்பி! முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டபேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு தீர்மானித்தது. ஆனால் சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேர் விடுதலையில் தாங்களே இறுதி முடிவெடுப்போம் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என தெரிவித்ததோடு, சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. தீர்ப்பை அடுத்து பேரறிவாளன் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் விட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையை அடுத்து சினிமா பிரபலங்கள் பலரு

காஞ்சி வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி: உயா் நீதிமன்றம் உத்தரவு

Image
விரிவாக படிக்க >>

18.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
18.05.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

Image
திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு திருப்பூர் : திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

தமிழகத்தில் மே 18 வரை கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Image
வட தமிழக கடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று (மே 16) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்... விரிவாக படிக்க >>

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Image
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.