Posts

Showing posts from April, 2022

இறையன்பு எடுத்த இப்படியொரு முடிவு: நோ சொல்லி கெத்து காட்டிய சம்பவம்!

Image
சிறந்த நூல்களுக்கான விருதுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூல் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பரிசு வழங்குவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜனுக்கு, இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, 2018ஆம் ஆண்டு வெளிவந்த நூல்கள் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பரிசு குறித்த விவரங்கள் 2021 பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிடப்பட்டன. விரிவாக படிக்க >>

இரண்டு துண்டான கையை ஒட்டவைத்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

Image
குடும்பத்தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து கையை ஒட்டவைத்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஒரிசா மாநில இளைஞரான 21 வயது கணேஷ் வசித்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி குடும்பத்தகராறு காரணமாக நடந்த பிரச்சினையில், அவரது உறவினர் ஒருவர் கணேஷை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் முதுகு, கழுத்து ஆகியவற்றில் வெட்டு விழுந்ததோடு வலது கை துண்டாக வெட்டப்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கணேஷ் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கணேஷின் துண்டான கைவிரல்களை ஈர துணி சுற்றி ஐஸ்கட்டி பெட்டியில் வைத்து பத்திரமாக கோவை... விரிவாக படிக்க >>

‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கான அரசு பரிசைதவிா்க்க வேண்டும்: வெ.இறையன்பு கோரிக்கை

Image
விரிவாக படிக்க >>

ஹீரோயின்களுக்கு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுவேன்.! ‘அந்த’ இயக்குனரின் அட்ராசிட்டிஸ்.!

Image
ஹீரோயின்களுக்கு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுவேன்.! ‘அந்த’ இயக்குனரின் அட்ராசிட்டிஸ்.! தமிழ் சினிமா தற்போது பெரும்பாலும் ஹீரோக்கள் கண்ட்ரோலில் தான் இருக்கும். அவர்களுக்கு ஏற்றார் போல கதைக்களங்களும் அமைக்கப்படும். இதனை உச்ச நட்சத்திரங்கள் அல்ல, வளரும் இளம் நடிகர்களே தங்களுக்கு மாஸ் காட்சி, பாடல் வேண்டும் என கேட்கும் அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்துள்ளது. ஆனால், அதனை கட்டுப்படுத்தி அவ்வப்போது தமிழ் சினிமாவை நல்ல பாதையில் வண்டியை திருப்புவது ஒரு சில நல்ல இயக்குனர்களே. அவர்களில் ஒருவர் தான் மிஷ்கின். இவர் படத்தில் யார் நடித்தாலும் , அவர்கள் மிஷ்கின் கதையை ரசிகர்களுக்கு கூறும் ஓர் கருவியாக மட்டுமே பயன்படுத்த பட்டிருப்பர். அது தனித்துவமாக இருக்கும். மிஷ்கின் படத்தில் விஷால், சேரன், நரேன், ஜீவா, பாவனா, பூர்ணா, அதிதி ராவ், நித்யா மேனன் என யார் நடித்தாலும் அவர்களின் மற்ற படங்களின் சாயல் சுத்தமாக இருக்காது. அவர்கள் மிஷ்கின் கூறும் வசனத்தை மிஷ்கின் பேசினால் எப்படி பேசுவரோ அப்படியே பேசியிருப்பர். இதையும் படியுங்களேன் – ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்லாமா?…விஜயும் அஜித்தும் ஜாலியாக பேசும்

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசே காரணம் என கூறுவது உண்மையல்ல -...

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசே காரணம் என கூறுவது உண்மையல்ல - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே!

ஊழல் வழக்கில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குற்றவாளி ஆங்சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை : ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு!!

Image
ஊழல் வழக்கில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குற்றவாளி ஆங்சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை : ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு!! ரபாங்காங்: ஊழல் வழக்கில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 76 வயதான ஆங்சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அரசை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் கலைத்தது. இதனை தொடர்ந்து அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சாங் சூகியும் கைது செய்யப்பட்டார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, முறைகேடாக வாக்கி டாக்கி வாங்கியது, மக்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டியது மற்றும் ஊழல் என அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இதில், அரசியல் தலைவர் ஒருவரிடம் இருந்து தங்கம் மற்றும் பலஆயிரம் டாலர்களை லஞ்சமாக பெற்றதாக சூகிக்கு எதிரான ராணுவ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைகள் முடிந்துள்ளது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.இந்த நிலையில், ஊழல் வழக்கில் ஆங்சான் சூகி குற்றவாளி என

ஒரு சேலஞ்சும் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ்- ‘பேக் டு ஃபார்ம்’- பந்தாடிய ராஜஸ்தான்

Image
ஒரு சேலஞ்சும் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ்- ‘பேக் டு ஃபார்ம்’- பந்தாடிய ராஜஸ்தான் புனேயில் நேற்று நடைபெற்ற 39வது ஐபில் டி20 லீக் ஆட்டத்தில் சில வெற்றிகளுக்குப் பிறகு பழைய பார்முக்குத் திரும்பிய ஆர்சிபி அணி 145 ரன்கள் வெற்றி இலக்கைக் கூட விரட்ட முடியாமல், குல்தீப் சென் (4/20), அஸ்வின் (3/17), பிரசீத் கிருஷ்ணா (2/23) ஆகியோரது அதிரடிப் பந்து வீச்சில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது. 2021 ஐபிஎல் சீசனில் பயங்கரமாக சொதப்பிய ரியான் பராக் என்ற 20 வயது வீரர் நேற்று சமயத்துக்கு ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடி 31 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 ரன்களை எடுக்க 4/68 என்ற நிலையிலிருந்து ராஜஸ்தான் 144 ரன்களை எட்டியது. இது எளிதில் விரட்டப்படக்கூடிய இலக்குதான் .ஆனால் இலக்கற்ற ஆர்சிபிக்கு இது பெரிய இலக்கு. இதற்கு முன்பாக இதே ஐபிஎல் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் 156 ரன்களை வெற்றிகரமாக தடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் (7) சிராஜிடம் எல்.பி.ஆனார். மீண்டும் அஸ்வினை 3ம் நிலையில் இறக்கி அற்புதமாக அவரைப் ப

பெங்களூருடன் இன்று மோதல் பழிதீர்க்குமா ராஜஸ்தான்?

Image
பெங்களூருடன் இன்று மோதல் பழிதீர்க்குமா ராஜஸ்தான்? மும்பை:ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரை வீழ்த்தி ராஜஸ்தான் பழியை தீர்த்துக்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2022 ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் 7  ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து பட்டியலில்  3-வது இடம் வகிக்கிறது. கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு எதிராக தொடர்ந்து  200 ரன்களுக்கு மேல் குவித்து அமர்க்களப்படுத்திய ராஜஸ்தான் அணியில் பட்லர் பட்டையை கிளப்புகிறார். அவர் 7 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதம் உள்பட 491  ரன்கள் குவித்துள்ளார். எனவே இன்று அவரது விக்கெட்டை எடுப்பதில்தான் பெங்களூரு பவுலர்கள் குறியாக இருப்பர். தேவ்தத் படிக்கல், கேப்டன் சஞ்சுசாம்சன், ஹெட்மயர் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (18 விக்கெட்),  அஸ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா மிரட்டுகின்றனர். பெங்களூர் அணியும் 8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்

ஏப்-27: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: பெட்ரோல் விலை டீசல் விலை வர்த்தகம் விற்பனை

முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக், குல்தீப் சென் அபாரம்

Image
விரிவாக படிக்க >>

27.04.22 Today Rasi Palan in Tamil 27.04.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

Image
27.04.22 Today Rasi Palan in Tamil 27.04.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

சென்னை வெற்றி தொடருமா?

Image
மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 38வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. ஜடேஜா தலைமையிலான சென்னை அணி வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருக்கிறது. அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி 4 பந்துகளில் டோனி 16 ரன்கள் விளாசி வெற்றியை தேடித்தந்தார். அந்த வெற்றி கிடைக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி இருக்கும். இந்த சீசனில் சிஎஸ்கே-பஞ்சாப் மோதுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே சந்தித்த தொடக்க லீக் போட்டியில் பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில்... விரிவாக படிக்க >>

பந்துவீச்சில் அசத்திய லக்னோ: பேட்டிங்கில் சொதப்பிய மும்பை- 8-வது போட்டியாக தொடர் தோல்வி

Image
ஐ.பி.எல் 2022 தொடரின் 37-வது போட்டியில் மும்பை அணியும் லக்னோ அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். டிகாக் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, மணிஷ் பாண்டே களமிறங்கினார். அவரும் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ராகுல் அதிரடியாக ஆடினார். ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், குர்ணால் பாண்டிய 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுபுறம் கே.எல்.ராகுல் அதிரடியைக் கைவிடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். அதிரடியாக ஆடிய அவர் 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 168 ரன்களைக்... விரிவாக படிக்க >>

அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கை இல்லை- இரு மொழிக் கொள்கை தான்.. தமிழக பள்ளி கல்வித்துறை உறுதி

Image
விரிவாக படிக்க >>

விவசாய கடன் அட்டை வழங்க இன்று முதல் மே 1 வரை சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

Image
சென்னை: தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில்  38.25 லட்சம் விவசாயிகள்  பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து  பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம் இன்று (24ம் தேதி) முதல் 1.5.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இன்று நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கூட்டப்பொருளாக பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் மே 1ம் தேதி வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.... விரிவாக படிக்க >>

தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Image
விரிவாக படிக்க >>

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் பந்தை நன்றாக அடிக்கின்றனர் - ஜெயவர்தனே ஜோக்

Image
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் பந்தை நன்றாக அடிக்கின்றனர் - ஜெயவர்தனே ஜோக் ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர், இஷான் கிஷன் போன்ற ஹைப் வீரர் இருவரையுமே ஒரே ஓவரில் சிஎஸ்கேவின் முகேஷ் சவுத்ரி வீழ்த்தி மும்பை இந்தியன்ஸை கிள்ளி எறிந்துவிட்டார், பிறகு உனாட்கட் தயவில் தோனி பினிஷ் செய்து முடித்தார். இந்நிலையில் இருவருமே டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் இருவரும் நன்றாகப் பந்தை அடிப்பதாக மும்பை பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே ஜோக் அடித்துள்ளார். டக் அவுட் ஆன ரோஹித் சர்மா 14 டக்குகளுடன் பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங் சாதனையை டக்கில் உடைத்துள்ளார். இந்நிலையில் நன்றாக ஆடுகிறார் என்கிறார் மகேலா ஜெயவர்தனே. ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 114 ரன்களை 16 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தன, தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரின் மோசமான ஆட்டம் குறித்து பீதி அடையத் தேவையில்லை என்று கருதுகிறார், 5 முறை சாம்பியனான இந்தியன் பிரீமியர் லீக்கில் 7 தோல்விகளுடன் தேவையற்ற சாதனையை படைத்திருந்தாலும், இரண்டு பேட்டர்களுக்கும் ஆ

Tamil Memes | Dhoni Fans Now... இணையத்தை கலக்கும் தல தோனி மீம்ஸ்

Image
Tamil Memes | Dhoni Fans Now... இணையத்தை கலக்கும் தல தோனி மீம்ஸ் Home » photogallery » memes » IPL 2022 MAHINDRA SINGH DHONI THE FINISHER VIRAL MEMES VJR Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | April 22, 2022, 13:56 IST

மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர் பலி

Image
விரிவாக படிக்க >>

பரபரப்பான போட்டி.. கடைசி ஓவரில் காட்டடி அடித்து ஃபினிஷிங் செய்த தோனி..! சிஎஸ்கே த்ரில் வெற்றி

Image
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதிய போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இதற்கு முன் இரு அணிகளும் ஆடிய 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அனைத்திலும் தோல்வி மற்றும் சிஎஸ்கே ஒரெயொரு வெற்றி என்ற மோசமான நிலையில், இந்த போட்டியில் மோதின. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்(அதுமட்டும்தான் செய்தார்). சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது. சிஎஸ்கே அணி: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி. மும்பை இந்தியன்ஸ் அணி: இஷான் கிஷன் (விக்கெட்... விரிவாக படிக்க >>

மிஸ்டர் அண்ணாமலை வன்னியர் சமூகத்தை எதிர்ப்பது நல்லதல்ல.. காடுவெட்டி குரு மகள் பரபரப்பு அறிக்கை

Image
காடு வெட்டி குருவின் மகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்த ஒரு சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டையும் உரிமைகளையும் வன்னியர் மக்கள் கொடுக்கக்கூடாது என்று கூறியது கிடையாது. மற்ற சமுதாயத்திற்கு முன்னின்று இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர்களும் வன்னியர்களே. இந்த இட ஒதுக்கீட்டுக்காக 25 உயிர்களை பலி கொடுத்ததும் வன்னியர்களே. ஆனால் இன்று அண்ணாமலை வரலாறு தெரியாமல் வன்னியர் மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடும் அமைப்புகளை ஒன்று திரட்டி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும், எதிர்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் வன்னியர்களின் உரிமை... விரிவாக படிக்க >>